காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, கடந்த 7ஆம் தேதியன்று அணை நிரம்பியது. மொத்த நீர்தேக்கும் உயரமான 120 அடியை எட்டியது.
பின்னர் நீர்வரத்து குறைந்ததையடுத்து15 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ம் தேதியன்று நீர் மட்டம் 120 அடியிலிருந்து 119.94 அடியாகவும், நீர் இருப்பு 93.37 டி. எம்.சி. ஆகவும் குறைத்தது.
தற்போது கர்நாடகத்தில் மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 93.47 டி.எம்.சி. ஆக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை மொத்த உயரமான 120.14 அடியை எட்டியது நடப்பாண்டில் இது இரண்டாவது முறையாகும்.
அணையிலிருந்து நீர் திறப்பு காலை 8 மணிக்கு வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாகவும், முற்பகல் 11.00 மணிக்கு 20,000 கன அடியாகவும், பிற்பகல் 1.30 மணிக்கு 27,500 அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் அணை, சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கன அடியும், அணையின் 16 கண் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,500 கன அடியும் வெளியேற்றப் பட்டு வருகிறது.
மேலும் கிழக்கு மேற்கு கால்வாயில் வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. நீர் திறப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதால் அணை, சுரங்க மின் நிலையங்களில் அதன் முழுஅளவு உற்பத்தியான 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
WhatsApp us