உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் தீபாவளி நாளில் மகாபோக் எனப்படும் பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
லட்டு போன்ற தீபாவளி இனிப்புகள் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி முந்திரி, பாதாம் ,பிஸ்தா உலர் திராட்சை போன்றவைகள் கொண்ட வசீகரமான இனிப்புகளும் இங்கு தயாரிக்கப்பட்டன.
தீபாவளி நாளில் பூஜைகளுக்குப் பிறகு இவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று கோவில் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்