மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் பாரபத்தியில் தனியார் கல்ல்லூரியில் நடைபெற்றது கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் நல்ல கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் நோக்கம்,மோடியை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்வதற்கான சக்தியை உருவாக்கும் 5 தொகுதி தானே என்று நினைக்க வேண்டாம், 40 தொகுதியிலும் வெற்றி இந்த கூட்டணி முழு தகுதியும் பெற்றுள்ளது.
காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்கும் நோக்கில் கூட்டணி அமைத்துள்ளோம்.
தமிழுக்கு டெல்லியிலும் தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிப்பதே பாரதிய ஜனதாவின் நோக்கம் நாட்டின் மீது அக்கரையும், மோடி மீது மரியாதையும் கொன்டவர் விஜயகாந்த், எனவே தங்களது கூட்டணியில்தான் இணைவார் என்றார்.
மோடி தலைமையிலான அரசு, தீவிரவாதத்திற்கு எள்முனை கூட இடம் அளிக்காது என்றும், புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களான சுப்பிரமணியன், சிவசந்திரன் தாக்குதலில் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்றும், கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுவத்துவதாகவும் கூறினார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்றும், பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
