இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கடந்த 12ந்தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.அதன்பேரில் கடந்த 13ந்தேதி கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான்(வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன்(25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வருவது தெரிய வந்தது. போலீசாரின் சோதனையில் 3 பேரின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது, 3 பேரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது.இதைத்தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று காலை 8 மணியளவில் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்று ஆஜர்படுத்தினார்கள்.
இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வருகிற 28ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று நேற்று நள்ளிரவு முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Pingback: KIU-Engineering School
Pingback: data sidney
Pingback: london taxi fares from heathrow
Pingback: 먹튀검증-499
Pingback: https://lizardlabs.to
Pingback: Washington.perfecthealth101.net
Pingback: fake quality watches
Pingback: nu golf thu xinh dep
Pingback: Coolsculpting
Pingback: click here
Pingback: video transitions peter mckinnon
Pingback: Sig Sauer
Pingback: ta travel center
Pingback: dog food
Pingback: 플렉스홀덤
Pingback: Study in Africa
Pingback: https://euroclub-th.com/
Pingback: eu dumps shop
Pingback: SEO
Pingback: Chaturbate Xo Raquel
Pingback: cloud computing digital transformation
Pingback: 미녀들의 테니스
Pingback: sbobet
Pingback: sbobet
Pingback: read more here
Pingback: sbobet
Pingback: sbobet
Pingback: magic mushrooms dried for sale
Pingback: brains club cc
Pingback: click here to investigate
Pingback: buy blue mushroom fable
Pingback: buy golden teacher mushroom online jumia
Pingback: ufabet911
Pingback: penis prosthetic big penis big prosthetic big dildo erect penis prosthetic
Pingback: unicvv