ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்துவது என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
