மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாராட்டுத் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், சீன அதிபர் வருகையின்போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு ஆகியவை, நமது கலாச்சாரத்தையும், மரபையும் ஒருசேர பிரதிபலித்தது என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சிமாநாடு, தமக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது என்றும், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். உச்சிமாநாட்டிற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்த, தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதமர் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
