தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் சில வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். தற்போது தி.மு.கவுடன் தோழமையில் உள்ள சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், எந்தெந்த கட்சிகள் என்பது பரம ரகசியம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் என்று ஜெயக்குர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக உடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
