கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடக்க இருக்கும் இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழா மார்ச் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கோலாகலமாக நடைப்பெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி பொதுவாக சிவராத்திரி தினத்தில் மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை இசைக் கச்சேரி, நள்ளிரவு யோகா, பாரம்பரிய கலாச்சரத்தை நிலைநாட்டும் வகையில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.
இந்த விழா ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிலை மைதானத்தில் நடப்பது வழக்கம். இந்தாண்டு சிவராத்திரி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கச்சேரி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.
இந்த்சமாச்சார் (WWW.INDSAMACHAR.COM) டிஜிட்டல் பங்குதாரராக இந்நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பவுள்ளது.
