தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக் காலம் வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. புதிய டிஜிபி ஆக நியமிக்கப்படப்போவது யார் என கேள்வி எழுந்த நிலையில், அதற்கான நியமன விதிகளின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு அனுப்பியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சம்மந்தப்பட்ட குழு கூடி, அதில் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இந்த பட்டியலை கவனமாகவும், சுதந்திரமாகவும் சீர்தூக்கி பார்த்து, ஜே.கே.திரிபாதியை, தமிழக காவல்துறை தலைவர் பொறுப்பில் டிஜிபி ஆக நியமித்திருப்பதாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி ஆக இருந்த ஜே.கே.திரிபாதி, சட்டம்-ஒழுங்கு பிரிவு டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்ளும் ஜே.கே.திரிபாதி 2 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார். தமிழக காவல் துறையில் பல பிரிவுகளில் டிஜிபி அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவிதான் காவல்துறை தலைவர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறையில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்தியாவிலேயே இரண்டு சர்வதேச விருதுகளை பெற்ற முதல் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றால் அது ஜே.கே.திரிபாதி தான். இன்று காவல் துறையில் உள்ள “பீட் ஆபிசர்” “குடிசை பகுதிகளை தத்தெடுத்து இளஞ்சிறார்களை நல்வழிபடுத்தும் திட்டம்” “புகார் பெட்டி” உள்ளிட்ட புதிய முறைகளை தான் திருச்சி காவல் ஆணையராக இருக்கும் போது கொண்டுவந்தார். 1985-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான திரிபாதி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில், பிச்டி முடித்து அதன் பிறகு ஐபிஎஸ் அதிகாரியானார். 1985- முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் எஸ்.பியாகவும், பின்னர் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி ஆணையராகவும், சென்னை இணை ஆணையராகவும், பின்னர் மதுரை மண்டல ஐஜி-யாகவும் பணியாற்றியவர்.
சிறை துறை, நிர்வாகம், அமலாக்கப்பிரிவு என காவல் துறையின் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், இரண்டு முறை சென்னை காவல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார்.
2001-ல் காவல் துறையில் சிறந்த நிர்வாகத்திற்காக ஸ்காட்லாந்து நாட்டில் இவருக்கு தங்கம் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், 108 நாடுகள் பங்கேற்புடன் நடந்த சர்வதேச காவல் துறை மாநாட்டில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
மெச்சதகுந்த பணிக்காக 2002-ல் இந்திய குடியரசு தலைவர் விருதையும், சிறந்த நிர்வாகத்திற்காக 2008-ல் பிரதம மந்திரி விருதையும் பெற்றுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரிவில் நீண்ட காலம் அனுபவம் உள்ள அதிகாரியான ஜே.கே.திரிபாதி அடுத்த இரண்டுகளுக்கு தமிழக டிஜிபியாக நீடிப்பார்.
Pingback: 조커바카라
Pingback: research in uganda
Pingback: Engineering
Pingback: Dictator Dirk
Pingback: guaranteed ppc reviews
Pingback: copy iwc
Pingback: 4garagedoor.info
Pingback: กู้เงินด่วนมหาสารคาม
Pingback: Dylan Sellers
Pingback: panerai replica
Pingback: satta king
Pingback: Buy marijuana online
Pingback: dang ky 188bet
Pingback: Eddie Frenay
Pingback: airport taxi cheltenham
Pingback: kid
Pingback: Mossberg Guns for Sale
Pingback: Mossberg guns in stock
Pingback: Devops
Pingback: printed cornhole boards
Pingback: michigan state cornhole
Pingback: track1&2 + pin
Pingback: ถ้วยฟอยล์
Pingback: Reputation management experts
Pingback: ถาดกระดาษ
Pingback: elojob
Pingback: buy dmt australia usa
Pingback: buy dmt online canada
Pingback: online mobile number tracker
Pingback: More Help
Pingback: สล็อตวอเลท
Pingback: mushroom spores,
Pingback: buy dmt
Pingback: buy fn guns
Pingback: แอพเงินด่วน