தமிழ்

நாளை நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டம்

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் பிரதமர் நாளை கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். இதையொட்டி, டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கமாண்டோ, ராணுவம், எஸ்பிஜி கமாண்டோ, டெல்லி போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள் என டெல்லி செங்கோட்டையை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவ படைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிய மோப்ப நாய் பிரிவு களத்தில் இறக்கப்பட்டு உள்ளன.

டெல்லியில் இரவுபகலாக வாகன சோதனையும், ரோந்துப்பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

டெல்லியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வரை தலைநகரில் ஆளில்லா விமானங்கள், சிறிய உளவு விமானங்கள், ராட்சத பலூன்கள், ரிமோட் விமானங்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ராஜ்பவனில் ஆளுநர் சத்யபால் மாலிக் உயர் அதிகாரிகளுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். ஸ்ரீநகர் செங்கோட்டையில் இம்முறை மூவர்ணக் கொடியேற்றப்பட்டு உயரப் பறக்க உள்ளது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

உதாம்புர் மைதானத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சீருடை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

குஜராத்தில் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து கடலோர காவல்படையினரும் போலீசாரும் கடற்கரையில் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில்களிலும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முப்படையினர், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், தேசிய மாணவர் படையினர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். 

36 Comments

36 Comments

  1. Pingback: Medium Mireille

  2. Pingback: dragon pharma official website

  3. Pingback: กู้เงิน สุรินทร์

  4. Pingback: http://63.250.38.81/

  5. Pingback: fake watches from china buy

  6. Pingback: bitcoin evolution review

  7. Pingback: buy marijuana online

  8. Pingback: td online

  9. Pingback: Intelligent automation

  10. Pingback: human hair wigs near me

  11. Pingback: Harold Jahn Utah

  12. Pingback: 안전놀이터

  13. Pingback: lace front wigs

  14. Pingback: wigs for women

  15. Pingback: swiss rolex datejust replica 116333 008 stainless steel 410l and 18k rose gold wrapped bracelet automatic 41mm

  16. Pingback: rolex submariner replica

  17. Pingback: www.fakerichardmille.com

  18. Pingback: track1&2 shop

  19. Pingback: devops consulting company

  20. Pingback: 쿠쿠티비 사이트

  21. Pingback: กล่องอาหาร

  22. Pingback: purchase dmt vape pens online for sale overnight delivery cheap https://thepsychedelics.net/

  23. Pingback: weed for sale

  24. Pingback: visit best carding forum cvv dumps

  25. Pingback: best cc dumps for carding

  26. Pingback: สล็อตวอเลท

  27. Pingback: คาสิโนออนไลน์เว็บตรง

  28. Pingback: replica christian la boutique shoes

  29. Pingback: buy psilocybin mushrooms united states​

  30. Pingback: boat rentals Miami

  31. Pingback: cc dumps

  32. Pingback: sbo

  33. Pingback: 토토사이트

  34. Pingback: Cliquez ici

  35. Pingback: click site

  36. Pingback: read more

Leave a Reply

Your email address will not be published.

5 × 4 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us