மத்திய அரசின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சற்று முன் நடைபெற்றது.அதில் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வமான தகவல்கள்.
இந்திய அரசு சார்பில் நேற்று ஜெய்ஷ் ஈ முஹம்மத் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்கு பதிலடியாக இன்று காலை பாகிஸ்தான் தனது விமான படை விமானங்களை நமது எல்லைக்குள் அனுப்பியது.. நமது படைகள் உடனே செயல்பட்டு அந்த F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தின.. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக நம் படைகளால் தடுக்கப்பட்டுள்ளது..
ஆனால், நமது படையிலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.. நமது விமான படையை சேர்ந்த MiG-21 Bison விமானம் வீழ்த்தப்பட்டது.. அதை இயக்கிய விமானியின் நிலை தெரியவில்லை..
பாக்கிஸ்தான் அவரை பிடியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.. உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு வருகிறது.
