தி.முக. தோழமைக் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ் கட்சிகளுடன் 21-ஆம் தேதியும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் 22-ஆம் தேதியும் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடு முடிவடைந்த நிலையில் மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவோ கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகவோ இல்லை.
இந்நிலையில் இன்றும் நாளையும் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறவோ உடன்பாடு கையெழுத்தாகவோ வாய்ப்பில்லை என்றும், அவர்களுடனான பேச்சுவார்த்தையும் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
