“கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்” என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா முக்கியமானதாகும். ஆண்டாள் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று பிறந்ததால் அன்றைய நாளில் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் வீதியுலாக்களும் நடைபெற்று வந்த நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களையும் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு உள்ளிட்ட நீதிபதிகள் பலரும் கலந்துகொண்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
