பாஜக எம்பிக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முகாமைம் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகளை வலியுறுத்தினார்.
பாஜக தானாக வளர்ந்து வந்த மரத்தைப் போன்றது அசம்பிள் செய்யப்பட்ட கட்சியல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொள்கையாலும் சிந்தனையாலும்தான் பாஜக இத்தனை பெரிய வெற்றியை பெற்று இன்று மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக வளர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி ஒரு தனிப்பட்ட குடும்ப வாரிசு அரசியலால் இக்கட்சி வளரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகவோ எம்பியாகவோ மாறினாலும் அடிப்படையில் அவர் தொண்டர்தான் என்று மறந்துவிடக்கூடாது என்றும் மோடி அறிவுறுத்தியுள்ளார். எத்தனை வயதானாலும் நாம் மக்களிடமிருந்து கற்கத் தயாராக இருக்கும் மாணவர்களைப் போல் இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் பாடம் நடத்த உள்ளனர்.
