அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டிய மாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த தின விழாவில் முதல்முதலாக ராஜேந்திரசோழனின் திருவுருவ ஓவியம் வெளியிடப்பட்டது.
வரலாற்று புகழ்கொண்ட அவரது பிறந்த தின விழா ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஒவ்வொரு வருடமும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முடிகொண்டான் தமிழ்சங்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் ராஜேந்திரசோழனின் திருவுருவ ஓவியம் முதல்முதலாக வெளியிடப்பட்டது.
இந்த ஓவியத்தை புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் ராசராசன் என்பவர் வரைந்திருந்தார். விழாவில் தமிழர்களின் ஆதிஇசையான பறைஇசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தன.
விழாவில் வரலாற்று ஆராய்ச்சியாளரும், கல்வெட்டு ஆய்வாளருமான பேராசிரியர் தியாகராஜனுக்கு ராஜராஜசோழன் விருதும், புதுச்சேரி ஓவியர் ராசராசனுக்கு ராஜேந்திரசோழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
