கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெனிந்தியாவின் நுழைவாயில் எனப்படும் சென்னை மாநகர் மிகக்கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தது. மக்கள் தெருக்களில் நின்று தண்ணீர் லாரிக்காக காத்திருந்தனர். இந்த செய்தி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் ஒலித்தது.

மரங்களை அழித்தல் மற்றும் மழைநீரை சேகரிக்க தவறியது ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்தவும் காவிரி நதியை மீட்கவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் விவசாயிகளுடன் இணைந்து காவிரி ஆற்றங்கரையில் மரங்கள் நட திட்டமிட்டார். அதற்காக பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் சென்னை கிங்கிஸ் அணியின் சிறந்த வீரரான மேத்யூ ஹைடனிடமும் ஆதரவை கோரினர்.
சத்குரு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “நீங்கள் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பது அறிந்ததே ஏன் நீங்கள் மரம் நடும் இன்னிங்ஸ்சில் தொடக்க வீரர்ராக கலம் இறங்கக்கூடாது? ஒரு 100 மரங்களாவது நடவேண்டும் ” என்று அன்பு கட்டளை விடுத்தார்.
அதை ஏற்ற ஹைடன் சத்குருவிற்கு டிவிட்டரிலேயே பதிலளித்தார் “விசில் போடு விலிருந்து பிளாண்ட் போடு சென்னைக்காக எதுவும் செய்யத்தயார். ஆனால் சத்குரு அவர்களே நூறு மரங்கள் மட்டுமல்ல 380 மரங்கள் நட தயாராகயிருக்கிறேன்” என்றார்.
விசில் போடு என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கீதம் ஆகும். அதனாலேயே விசிலில் போடுவிலிருந்து இருந்து மரம் நடப்போவதாகவும் தெரிவித்தார். அதை உணர்த்தும் வகையிலே தான் பிளாண்ட் போடு என பதிவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 380 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர் ஹைடன். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்தது இல்லை இதை கூறும் வகையில் நூறு மரங்கள் என்ன 380 மரங்கள் நட தயாராகைருப்பதாக ஹைடன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
