காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதர் கடைசி 10 நாட்கள் மட்டுமே நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் தரிசன உற்சவம் நடைபெற்று வருகிறது . அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சயன கோலத்தில் காட்சியளித்து வரும் அத்திவரதர், கடைசி 10 நாட்கள் மட்டுமே நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமையான அத்தி மரத்தால் ஆன அத்திவரதர் சிலை பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் இருந்ததால், சிலையின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை கோவில் நிர்வாகம் எடுத்துள்ளது.
அத்திவரதரை முக்கிய பிரமுகர்கள் பலர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார்.
