உலக புராதன நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரத்தையும் யுனெஸ்கோ இணைத்துள்ளது.
‘பிங் சிட்டி’ என்றழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரம் கட்டடக்கலைக்கு புகழ்பெற்றது. அந்நகரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் அனைவரையும் ஈர்த்து வருவதால், சுற்றுலாபயணிகள் அங்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், பழமைவாய்ந்த நினைவு சின்னங்கள் கொண்ட ஜெய்ப்பூர் நகரத்தை,புராதன நகரமாக அறிவித்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.
ஜெய்ப்பூர் இந்த பட்டியலில் இடம் பிடித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து அதனை வரவேற்று, டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஜெய்ப்பூர் கலாச்சாரம் மற்றும் வீரத்துக்கு புகழ்பெற்ற நகரம் என்று தெரிவித்தார்.
மேலும் அந்நகரின் நேர்த்தியான தோற்றம் மற்றும் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
