திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலைய முறைகேடு பற்றி புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9442255542 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் – 9080970094, திருவாரூர் துணை மேலாளர்- 9095333229 ஆகியோரை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல மன்னார்குடி துணை மேலாளர் – 9487171815 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
