மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல்சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், 5வது நாளாக இராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 2ம் தேதி முதல் ராமேஷ்வரம், பாம்பன் மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வரும் இராமநாதபுர மாவட்ட மீனவர்கள், கரையோரம் 500க்கு மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த திடீர் பாதிப்பால் சுமார் 2 லட்சம் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், சுமார் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூறைக்காற்றில் தங்களது படகுகள் சேதமடைந்து வருவதாக தெரிவிக்கும் மீனவர்கள், படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
