கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்ட தங்க நகைகள் மற்றும் நிதி நிறுவன அதிபர் மன்சூர்கானுடன் தொடர்புடைய அரசியல் கட்சித் தலைவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மன்சூர் கானுக்கு நெருக்கமாக விளங்கிய கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் ஜூலை 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 209 கோடி ரூபாய் மதிப்பிலான மன்சூர்கானின் அசையா சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.தமக்கும் மன்சூர் கானுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவ்வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ள போதும், சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக பாஜக வலியுறுத்தியுள்ளது.
