கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் எனும் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370 யை ரத்து செய்யப்பட்டிருப்பதால் காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழியும் என்றும், அம்மாநிலம் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளதாகவும், தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் உரிய ஆணைகளை அவர் பெற்றுத் தருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
பலதரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி தன்னுடைய அனுபவங்களை குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு இந்த நூலில் பகிர்ந்துள்ளளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இறுதியில் ஏற்புரை நிகழ்த்திய வெங்கய்யா நாயுடு, தொடக்கக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். பிறமொழிகளை திணிக்கவும் கூடாது என்றும், அதே வேளையில் எதிர்க்கவும் கூடாது என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றங்களில் தாய் மொழியில் வாதாடும் நிலை வரவேண்டும் என்று தாம் கருதுவதாக கூறிய வெங்கய்யா, உச்சநீதிமன்றத்தின் தென்னக அமர்வு சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
