ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு.
ஸ்டெர்லைட் ஆலை நிபந்தனைகளுடன் இயங்கலாம் என்ற தேசிய தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் ,ஆலையை மூட உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டு, அதனுடைய தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது மற்றும் இன்றைய தினத்திற்குள் அனைத்து தரப்பினரும் தங்களுடைய எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் தமிழக அரசு சார்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யப்பட்டது,அதில் குறிப்பாக அந்த ஆலை இயங்குவது அப்பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ளது ,அப்பகுதி மக்களுடன் மக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே அந்த முடிவானது எடுக்கப்பட்டதாகவும் , அங்கே இருக்கக்கூடிய அமிலங்கள் குறிப்பாக காப்பர், ஜிப்சம், லெட் போன்ற அமிலங்களின் கழிவுகள் வெளியேறுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, காற்று மாசு அதிக அளவில் உள்ளது.
அங்கு ஆலையில் தேக்கி வைத்திருக்கும் இதுபோன்ற உலோகங்களால் அவர்களால் சரியாக பராமரிக்கவில்லை தேசிய தீர்ப்பாயம் தெரிவித்த நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை அதனால் தேசிய தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் மனுவில் கோரிக்கை.
தேசிய ஸ்டெர்லைட் ஆலை தரப்பும் அவர்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த வழக்கில் ஒரு தரப்பான வைகோவும் அவருடைய எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் இந்த வழக்கின் தீர்ப்பு வர உள்ள நிலையில் இந்த எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாதங்களை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பானது மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
