டெல்லி: இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட ஐந்து துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேர்வு செய்யப்பட்டிருந்த 42 பேருக்கு விருதுகளை வழங்கி அவர்களை கெளரவித்தார். இந்த விருதுப்பட்டியலில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
