லண்டனில் பினாமி பெயரில் ஹோட்டல் வாங்கி விற்றது தொடர்பாக, ராபர்ட் வத்ராவுக்கு எதிரான வழக்குகளை அமாலக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில், வருகிற 16ஆம் தேதி வரை, ராபர்ட் வத்ராவுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், ராபர்ட் வத்ரா நேரில் ஆஜராகியுள்ளார். இவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தபோது, அவரது மனைவியும், உத்திரப்பிரதேச காங்கிரஸ் நிர்வாகியுமான பிரியங்கா வத்ராவும் உடன் வந்தார்.
