குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பகல் 1.45க்கு தனி விமானம் மூலம் சென்னை வரும் குடியரசுத் தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், மாலை 4 மணிக்கு தி. நகர் இந்தி பிரச்சார சபாவில் நடக்கும் விழாவில் பங்கேற்று, அங்கு மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மீண்டும் ஆளுநர் மாளிகை செல்லும் அவர், நாளைக் காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் புறப்பட்டுச் செல்கிறார்.
