சென்னை: சிறு, குறு தொழில் செய்வோருக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக ரூ.1,200 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். மேலும், மண்பாண்டம் செய்வோருக்கும் ரூ.2000 தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
