நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியால், கோவையில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் மூன்று மணி நேரமாக நிறுத்தப்பட்டது.
கோவையில் இருந்து சென்னையை நோக்கி புறப்பட்ட பயணிகள் விரைவு ரயில், நாமக்கல் பள்ளிபாளையம் வழியாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தண்டவாளத்தின் மேலே இருந்து மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரிகளின் தகவலின் படி அவ்வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர். இதன் காரணமாக மூன்று மணி நேரமாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
