கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 17 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்கின்றனர்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கடந்த மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறவில்லை. கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்ற எடியூரப்பா, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து இறுதி ஒப்புதலை பெற்றதாக கூறப்படுகிறது.
அதன்படி 17 பேர் இன்று காலை 10.30 மணியளவில் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் அமைச்சர்கள் கே. எஸ். ஈஸ்வரப்பா, பசவராஜ் பொம்மை மற்றும் கட்சி மாறி வந்த ஹெச். நாகேஷ் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
