அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் .
வரிசையில் நின்ற சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் ஆனால் சிகிச்சை பலனின்றி சேலத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும், சென்னையைச் சேர்ந்த மூதாட்டியும், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பலியாகினர்.
இன்று ஒரே நாளில் வரிசையில் நின்று மயங்கிய மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் ஸ்வாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூறியதாவது:
மிக மோசமான துர்நாற்றம் வீசுவதால் தங்களால் சுவாசிக்க முடியா நிலை உள்ளதாகவும், ஒரு சில காவல் துறையினர் மிக கடுமையாக நடந்து கொள்ளவது வேதனை அளிப்பதாகவும் கூறினர்.
