சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் இல்லத்துக்கு, தமது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க ரஜினி சென்றார். அங்கு நடிகர் ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின் போது பொதுவான அரசியல் பேசியதாக திருநாவுக்கரசரும், எதேச்சையான நிகழ்வு என திருமாவளவனும் விளக்கமளித்துள்ளனர்.
மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கவே அரசியல் கட்சியினரைச் சந்தித்து வருவதாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.
