2019ம் ஆண்டிற்கான உலக வர்த்தக மாநாடு செவ்வாய்க்கிழமை ஸ்விஸ் ஸ்கி ரிசார்ட்டில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதில் பஹ்ரைன் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் என அந்நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வாரியத்தின் இயக்குனர் சைமன் கால்பின் தெரிவித்துள்ளார்.
” இந்த உலக வர்த்தக மாநாடு பஹ்ரைன் தொழில் மற்றும் வணிகத்திற்கு தயாராகவுள்ளது என்பதை இங்குள்ள சில மாற்றங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளை முக்கியப்படுத்தி காண்பிக்க ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறோம்” என்றார் சைமன்.
வளைகுடா பகுதிகளில் குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக பஹ்ரைன் இருந்தாலும், தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு வரவேற்பு அளிப்பதில் முதன்மையான பகுதியாக இது உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் சைமன்,
2009ம் ஆண்டும் சீனா மற்றும் பஹ்ரைன் இடையேயான எண்ணையல்லாத சரக்கு வர்த்தகம் 872 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக 2017ம் ஆண்டு உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஹுவாவே போன்ற சீனாவின் பெரிய நிறுவனங்கள் தனது பிராந்திய தலைமையகத்தை பஹ்ரைனில் கொண்டுள்ளது.
சீன முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள பஹ்ரைன் மேலும் ,பெரும் முதலீட்டாளர்கள் வந்தாலும் வரவேற்க தயாராக உள்ளது. உலக வங்கியின் 2017ம் ஆண்டிற்கான வர்த்தக அறிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் பஹ்ரைன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
”பஹ்ரையின் ஹாக்காங்கை போன்ற பொருளாதார பண்புகள் கொண்டுள்ளது. பஹ்ரைன் ஹாங்காங்கை விட சிறியதாக இருந்தாலும் இங்கு வரியில்லை, மிகவும் தாராளாமான, வரவேற்பளிக்கும் நாடாகும். உள்ளூரில் பங்குதாரர்கள் அல்லது உள்ளூர் முதலீட்டாளர்களைக் வைத்துக்கொள்ள எந்த வரம்பும் கிடையாது. மேலும், E- காமர்ஸ், தரவு மையங்கள், கேம்மிங் நிறுவனங்கள் போன்றவற்றைப் பஹ்ரைன்னை ஒரு மையமாகப் பயன்படுத்த வரவேற்கிறோம்.” – சைமன் கால்பின்.
