பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22ம் தேதி, 2019 இந்தியன் கிளப் வளாகத்தில் மாபெரும் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிங் ஹமத் பல்கலைகழக மருத்துவமனை ஆதரவுடன் சங்க சமூகநலத்துறையின் ஏற்பாட்டின் பெயரில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு இந்திய அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களை திரளாக கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
அனைத்து கொடையாளர்களுக்கும் சங்க சமூகநலத்துறை செயலாளர்கள் பிரவீன் கிருஷ்ணா, கார்த்திக் செந்துரபாண்டியன் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் பாராட்டுப்பத்திரம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
Sisel Panayil Soman
Chief Operations Officer, IndSamachar, Bahrain
