முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மருத்துவமனைக்குச் சென்று அருண்ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, ராம்விலாஸ் பாஸ்வான், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனைக்கு வந்தனர். ஜெட்லி உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடியும் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
