காஷ்மீர் விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ரஜினியின் குரல் ஒலித்திருப்பதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காஷ்மீர் விவகாரத்தில், நடிகர் விஜய் சேதுபதி கூறியிருந்த கருத்து குறித்து தாமாக எந்த கருத்தையும் கூறவில்லை என்றும், தெரிவித்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் சுற்றுப்பயணம் குறித்த முதலமைச்சரின் கருத்தோடு தாம் உடன்படுவதாக கூறியிருக்கிறார். அத்திவரதர் தரிசனத்திற்கான காலநீட்டிப்பு குறித்து, ஆன்மீகவாதிகள் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில், இதுவரை பாஜகவுக்கு எவ்வளவு உறுப்பினர்கள் சேர்க்கை சேர்க்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, பின்னர் பதில் அளிப்பதாக தமிழிசை கூறியிருக்கிறார்…
