ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள நாகவல்லி மற்றும் வம்சதாரா நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தாழ்வான பல பகுதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. ஏராளமான கிராமங்களில் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கனமழை காரணமாக அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டிருப்பதால் ஆந்திராவுக்கும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இருநதிகளிலும் வினாடிக்கு தலா 50 ஆயிரம் கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயிருக்கு அஞ்சுகின்றனர்.
அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
