திருப்பூர்: உடுமலைப்பேட்டைப்பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை, வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கான, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, யானையை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்தார்.
