ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். மீண்டும் பரிந்துரைப்பதா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், ஆளுநர் குறித்த காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென சட்டமில்லை என்றும் கூறினார்.
