சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். 4 வாரங்களுக்குள் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.
1984-ல் சீக்கியருக்கு எதிரான நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் 1996ம் ஆண்டு கீழ்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. . மேலும் 88 பேரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1984-ல் நாடு முழுவதும் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் 2800 பேர் கொல்லபட்டனர். பெரும்பாலானோர் டெல்லியில் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் இந்திரா காந்தி கொலைக்கு பின்னர் நடந்தது குறிப்பிடத்தக்கது.
