ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல நாட்களாக மக்கள் நடத்திய போராட்டத்தின் பிறகு ஆலை மூட வேண்டும் என உத்தரவு விடுக்கப்பட்டது. ஆனால், கடந்த வருடம் டிசம்பர் 15 அன்று, ஸ்டெர்லைர் ஆலையை மூடுவதற்கான தமிழ்நாடு அரசின் உத்தரவை நீக்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் ஆலை திறக்கும் படி உத்தரவிட்டது. மூன்று வாரங்களுக்குள் வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை அருகே வசிக்கும் மக்களுக்கு ரூ.100 கோடி 3 வருடங்களுக்கு வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தை பசுமை தீர்ப்பாயம் அறிவுறித்தியுள்ளது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என உச்சநீதிமன்றத்தை தற்போது தமிழக அரசு நாடியுள்ளது.
கடந்த ஆண்டும் மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
