தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது.
சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேரும் என 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களை விதிப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தால் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் தேதி கடைசி நாள். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
6 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். போட்டி இல்லாதபட்சத்தில் வியாழக்கிழமையே மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களாக, தேர்தல் நடத்தும் அதிகாரியால் அறிவிக்கப்படுவார்கள்.
