பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்…
வைகோ அறிவாலயத்திற்கு வருவாரா என்று தெரியவில்லை, அப்படியிருக்க மோடி குறித்து அவர் விமர்சிக்கிறார்.வைகோ ஒரு தடுமாற்றம் உள்ள நிலையிலேயே பேசி வருகிறார்.பிரதமரை தொடர்ந்து விமர்சித்தால் சரியாக இருக்காது, இதை வைகோவுக்கு எச்சரிக்கையாகவே முன் வைக்கிறேன் என கூறினார்.
மேகதாதுவில் அளித்து இருப்பது ஆய்வுக்கான அனுமதியே தவிர வேறொன்றும் இல்லை, அரசியல் காரணத்திற்காக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றனர்.தென்னை விவசாயிகள் வாழ்வாரத்தை மீட்க நேர்மறையான அரசியல் செய்யாமல் இப்படி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றார்.
படேலுக்கு சிலை எழுப்பியது குறித்த கேள்விக்கு, படேலுக்கு இல்லை என்றால் இந்த நாடு துண்டாடப்பட்டு இருக்கும். 3 ஆயிரம் கோடி சிலை வைத்ததில் 15 நாளில் 30 கோடி வசூலாகி உள்ளது என்று பதிலளித்தார்
செயற்கை மழை வைத்தாவது குளங்கள் நிரம்பி தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனவும் கூறினார்.
