உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் பியுஸ் கோயலிடம் தமிழக அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லியில் நேற்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆயிரத்து 608 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என்றும், செயல்பாட்டு நிதி 560 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 2 லட்சம் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேரன், நீலகிரி விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத முதல் வகுப்பு பெட்டிகளை மீண்டும் அறிமுகப்படுத்தவும், மதுக்கரை ரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள மரப்பாலத்தை விரிவாக்கம் செய்யவும்,கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்தவும்
