தமிழக அரசு பள்ளிகளில் வாரம் ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மக்களுடன் இணைந்து அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை தன்சிகா உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயாராக இருப்பதாகவும், இந்தத் திட்டம் விரைவில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பாடப்புத்தகங்களில் உள்ள அச்சுப்பிழைகள் சரிசெய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், எந்த அரசு பள்ளிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்றும், ஓரிரு தனியார் பள்ளிகள் தான் தண்ணீர் தட்டுபாட்டால் மூடும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
