காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை நாளை முதல், பக்தர்கள்இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. அத்திவரதரை தரிசிக்க இலவசமாகவும், ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அத்திவரதரை தரிசிக்க வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை முதல் பக்தர்கள் இலவசமாக தரிசிக்கலாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் இன்று அறிவித்துள்ளார்.
WhatsApp us