ஜம்மு காஷ்மீர் நாட்டிலேயே பெரிய யூனியன் பிரதேசமாக உருவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு, டெல்லி, லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
இதில் டெல்லி மற்றும் புதுச்சேரி சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களாகும். இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் நாட்டின் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகவும், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். இதற்கு அடுத்தபடியாக 2வது மிகப் பெரிய யூனியன் பிரதேசமாக லடாக் அமையும்.
