ஈரோட்டில் சிறுநீரக மருத்துவமனையின் பெயரில் போலியான முகநூல் பக்கத்தை அமைத்து 500 க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுநீரகம் தானமாக வழங்கினால் 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்ததைப் பார்த்து தனது சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒருபெண் இந்த மருத்துவமனைக்கு நேரில் வந்துள்ளார். பதிவு கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இப்படி 500க்கும் மேற்பட்டவர்களிடம் போலி முகநூல் கணக்கு மூலம் மோசடி செய்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கொலின் ஸ்டேன்டி, ஒகோவா ஸ்டீபன் ஆகிய அந்த இருவரும் பெங்களூர் தங்கியிருந்து மோசடி செய்ததை அறிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
