தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் ரூ. 7 கோடியை கையாடல் செய்ததாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கே. ராஜன், எஸ்.வி.சேகர், ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.ரூ.8.45 கோடி பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக விஷால் ஒப்புக் கொண்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
“சங்கத்தில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டு , மீண்டும் அங்கேயே வைத்தாலும் அது குற்றம் தான். விஷால் ஆரம்பத்திலிருந்தே எந்த விதிகளையும் மதிப்பதில்லை” – நடிகர் எஸ்.வி.சேகர்.
