உத்தரப்பிரதேச மாநிலம் கோவில் நகரமான வாரணாசியில் சாலையில் மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பது, சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் என அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு கேபிள் கார் சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்துக்கு ஆகும் செலவை விட 70சதவீதம் குறைந்த செலவே கேபிள் கார் பயணத்துக்கு ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு கேபிள் காரில் 80 பேர் வீதம், ஒரு மணி நேரத்துக்கு 12ஆயிரம் பேர் இதில் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
அடிக்கடி கேபிள் கார் வரும் என்பதால் பயணிகள் காத்திருக்கும் அவசியமும் இல்லை.
இந்தியாவில் பெரும்பாலும் சுற்றுலா தலங்களில் மட்டுமே கேபிள் கார் வசதி உள்ள நிலையில் டேராடூன்,விசாகப்பட்டினம்,கான்பூர் ஆகிய நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இத்திட்டத்தை நடைமுறை படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
