தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் எந்த பள்ளியும் மூடப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கைகளை மேர்க்கொள்ப்பட்டுள்ளது- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு பாடதிட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறு பாடத்திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக மொழிப் பாடத்தில் மாற்றமில்லை.
தேவைப்பட்டால் தமிழ் ஆங்கிலம் தவிர மற்ற நான்கு பாடங்களில் ஆப்ஷன் முறையில் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வரிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வரிம் கருத்துக்கு பிறகு மக்களின் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும்.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் எந்த பள்ளியும் மூடப்படவிள்ளை. அனைத்து பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கைகளை மேர்க்கொள்ப்பட்டுல்ளது.
பாட புத்தகங்கள் முழுமையாக சென்றடையாத பள்ளிகளிகளில் இன்று அல்லது நாளை மாலைக்குள் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். புதிய கல்வி கொள்கை பொருத்தவரை உரிய தீர்வுகளை முதல்வர் நாளைக்கு முடிவெடுப்பார்.
செங்கோட்டையன் – பள்ளி கல்விதுறை அமைச்சர்
